தேசிய சூறா சபையின் பிராந்திய உறவினை பலப்படுத்தும் நோக்கில்
பிராந்தியங்களில் காணப்படுகின்ற சமூக, அரசியல், பொருளாதார இருப்பு சார்
பிரச்சினை அடையாளம் கண்டு அதற்கான தீர்வினை தேசிய மட்டத்தில் பெற்றுக்
கொடுக்கும் நோக்கில் எடுத்துச் செல்வதற்கான தீர்வினை தேசிய சூறா சபை
பிராந்திய விடயங்களை மேற்கொள்ளும் நோக்கில் இன்று (09) சாய்ந்தமருது பரடைஸ்
வரவேற்பு மண்டபத்தில் தேசிய சூறா சபையின் தலைவர் தாரிக் முஹம்மது அவர்களின்
தலைமையிலும், மீள்பார்வை பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சிறாஜ்
மசூஹூரின் நெறிப்படுதலிலும் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் தேசிய சூறா சபையின் நிறைவேற்று குழு
உறுப்பினர்களான பேராதெனிய பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர்
ஹஸ்புள்ளா, தேசிய சூறா சபையின் உப தலைவர் அஷ்ஷெக். எஸ்.எச்.எம். பழில்
நளிமி, அகில இலங்கை வாலிப முன்னணியின் முன்னால் தலைவர் சட்டத்தரணி ரஷிட்
எம். இம்தியாஸ், தெ.கி.ப. கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் ரமிஸ்
அபூபக்கர், சரியா கவுசிலின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் கொழும்பு பெரிய
பள்ளிவாசலின் பேஸ் இமாமுமான மெளலவி எம். தஸ்லிம், கல்விமான்கள், சமூகத்
தலைவர்கள், சிவில் சமுக அமைப்புக்களின் தலைவர்கள் உட்பட பல்துறைசார்
விற்பன்னர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment