விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி
வாரத்தையும், சுகாதார வாரத்தையும் முன்னிட்டு விளையாட்டு மற்றும் சுகாதார
அமைச்சினால் ஏற்பாடு செய்த உற்சாகமான வாழ்க்கையின் மூலம் அனைவருக்கும்
சுகம், மகிழ்ச்சி மற்றும் ஆனந்தம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற
உடற்பயிச்சி நிகழ்வு இன்று (27) காலை சுகாதார அமைச்சின் வளாகத்தில்
நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு நாட்டின் அதிமேதகு
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, சுகாதார, மற்றும் சுதேச மருத்துவத்துறை
அமைச்சர் ராஜித சேனாரத்ன, விளையாட்டுதுறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர,
சுகாதார, மற்றும் சுதேச மருத்துவத்துறை பிரதி அமைச்சர் பைசால் காசிம்,
மற்றும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும்
கலந்துகொண்டனர்.


Post a Comment