பட்டிருப்பு
தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியின் 99 வருட நிறைவையும்
100வது ஆண்டு ஆரம்பத்தையும்
முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு நடைபவனியும் ,இரத்ததான முகாமும் இம்மாதம் 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை
இடம்பெறவுள்ளது.
1919 ஆம் ஆண்டு
ஏப்ரல் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை கல்வித்துறையிலும் ,இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் மிகவும்
முன்னணி வகிக்கின்றது.
அதிபர் ,பிரதி அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,கல்விசாரா உத்தியோஸ்தர்கள், இணைந்த அபிவிருத்தி உத்தியோஸ்தர்கள் ,பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு, பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பெரும்
பங்காற்றலுடனும் தியாகத்துடனும் இப்பிரதேசத்திலுள்ள மாணவர்களுக்கு கல்வியினை
வழங்குவதில் முன்னணி வகிக்கும் இப்பாடசாலையின் நூற்றாண்டு விழாவினை மிகவும்
விமரிசையாக கொண்டாடும் வகையில் பிரமாண்டமான முறையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள
விழிப்புணர்வு நடைபவனியிலும் ,களுவாஞ்சிகுடி
ஆதார வைத்தியசாலையின் புரண அனுசரணையில் பாடசாலை வளாகத்தினுள் ஒழுங்கு
செய்யப்பட்டுள்ள இரத்ததான முகாமிலும் அனைவரும்
கலந்து கொள்ளுமாறு பாடசாலை நிர்வாகம் கேட்டுக் கொள்ளுகின்றது.


Post a Comment