-யூ.கே.காலித்தீன்- விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய தேசிய வாரத்தின் இறுதித் தினமான இன்று
(30) சனிக்கிழமை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி
எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் கல்முனையில் பிரமாண்டமான முறையில் பல்வேறு
விளையாட்டு நிகழ்ச்சிகள் காலை முதல் மாலை வரை இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகம், அரச நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு,
விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியவற்றின் வழிகாட்டலில் கடந்த திங்கட்கிழமை
ஆரம்பமான விளையாட்டு மற்றும் உடல் ஆராக்கிய தேசிய வாரத்தை முன்னிட்டு
நாடளாவிய ரீதியில் விஷேட விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளும் உடல் ஆரோக்கிய
நிகழ்வுகளும் கடந்த 5 நாட்களாக வெவ்வேறு தொனிப்பொருளில் இடம்பெற்றன.
அதன் அடிப்படயில் சற்றுமுன்னர் மரதன் ஓட்டப் போட்டி ஒன்று நீலாமனையில் பிரதி அமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது மாளிகைக்காடு வரை இடம்பெறவுள்ளது.









Post a Comment