ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொடவை ஏசியதாக கூறப்படும் பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க, பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
காணாமல் போனதாக கூறப்படும் பிரகீத் எக்னெலிகொட தொடர்பிலான வழக்கு ஹேமாகம நீதவான் நீதிமன்றத்தில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்குக்கு வருகைதந்திருந்தபோதே, ஞானசார தேரர் இவ்வாறு ஏசியதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டப்பட்டிருந்தது.

Post a Comment