-எம்.ஐ.எம்.அஸ்ஹர், யூ.கே காலித்தீன்- "ஒரே நாடு பெரும் சக்தி" எனும் தொனிப்பொருளில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 68வது சுதந்திர தின நிகழ்வும், புனர் நிர்மாணம் செய்யப்பட வெளி நோயாளர் பிரிவும் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று(04) சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் என். ஆரிப் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், விசேட அதிதிகாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ. மஜீட், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல். அலாவுதீன், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா, கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.பஷீர் ஆகியோர் உட்பட அதிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.









Post a Comment