இலங்கையின் 68வது சுதந்திர நினைவு தின வைபவம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (04) முற்பகல் காலி முகத்திடல் இடம்பெற்றது.
இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட சபாநாயகர், எதிர்கட்சித் தலைவர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு தூதுவர்கள் என அதிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
முப்படைகளின் அணிவகுப்புகள், கலாசார நிகழ்வுகள் என்பன இடம்பெற்றதுடன், சிங்கள மொழியில் தேசியக் கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், தமிழ் மொழியில் தேசியக் கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் முடிவுறுத்தப்பட்டமை ஒரு வரலாற்று நிகழ்வாக கருதப்படுகின்றது.


















-படங்கள்: ஜனாதிபதி ஊடகப்பிரிவு-


Post a Comment