Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

ஓசியஸ் கெம்­பஸில் கற்கை நெறி­களைப் பூர்த்தி செய்த மாண­வர்­க­ளுக்கு சான்­றிதழ் வழங்கும் நிகழ்வு!

-எம்.ஜே.எம்.சஜீத்-
ஒவ்­வொரு மனி­தரின் வாழ்­விலும் வாழ்­விலும் போதிய பயிற்­சியும் இருக்­கு­மாயின் அவர் வாழ்வில் உயர்ச்சி நிலை அடை­வது உறு­தி­யாகும். இன்­றைய நவீன உலகின் சவால்­க­ளுக்கு முகம் கொடுக்கும் வகையில் இளை­ஞர்கள் ஒவ்­வொ­ரு­வரும்  தம்மை தயார் படுத்­திக்­கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண  சுகா­தார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர்  தெரி­வித்தார்

ஓசியஸ் கெம்­பஸில் கற்கை நெறி­களைப் பூர்த்தி செய்த மாண­வர்­க­ளுக்கு சான்­றிதழ் வழங்கும் நிகழ்வு  சாய்ந்­த­ம­ருது லீ மரி­டியன் வர­வேற்பு மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. இந்­நி­கழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­றும் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
இளைஞர் சேவை எம்.வை.ஹாறுன் தலை­மையில் நடை­பெற்ற இந்­நி­கழ்­வின்­போது தொடர்ந்தும் அவர் உரை­யாற்­று­கையில்…..

ஒருவர் வாழ்வில் உயர் நிலை அடையும் வகையில் பல்­வே­றான முயற்­சி­களை மேற்­கொள்­கின்­றனர். அது­மட்­டு­மல்­லாமல் பல பயிற்­சி­க­ளையும் அவர்கள் பெற்றுக் கொள்­கின்­றனர். பயிற்­சியும் முயற்­சியும் ஒருங்கே சிறந்த முறையில் அமை­யு­மாயின் அவர் வாழ்வின் உயர்ந்த ஸ்தானத்­தினைப் பெற்­றுக்­கொள்­வது  இல­கு­வான விட­ய­மாகும்.

இன்­றைய நவீன உலகின் சவால்­க­ளுக்கு முகம் கொடுக்கும் வகையில் இளை­ஞர்கள் ஒவ்­வொ­ரு­வரும் தம்மை தயார் படுத்­திக்­கொள்ள வேண்டும். அவற்றுள் எமக்­கான வரு­மா­னத்­தினை ஈட்டும் வகையில் தொழிற் பயிற்­சி­க­ளையும் பெற்­றுக்­கொள்ள வேண்­டி­யது காலத்தின் தேவை­யாக உள்­ளது. ஒருவர் பெற்­றுக்­கொள்ளும் வேண்­டி­யது காலத்தின் தேவை­யாக உள்­ளது. ஒருவர் பெற்­றுக்­கொள்ளும் பயிற்­சிக்­காக வழங்­கப்­படும் சான்­றி­தழ்கள் பலரின் வாழ்க்­கையை உயர் ஸ்தானத்­திற்கு கொண்டு             சென்­றி­ருக்­கின்­றது.

கடந்த காலங்­களில் பல்­வேறு உயர் கற்கை நெறி­களை மேற்­கொள்­வ­தற்கு கிராமப் புறங்­க­ளி­லுள்ள இளை­ஞர்­க­ளுக்கு முடி­யாத காரி­ய­மாக இருந்­தன. ஆனால் தற்­போது பெரும்­பா­லான கிரா­மப்­பு­றங்­களில் சர்­வ­தேச தரத்­திற்கு இணை­யான பயிற்சி நெறி­களை மேற்­கொள்ளக் கூடிய பயிற்சி நிலை­யங்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. தமது கால­டியில் எளிதில் கிடைக்கக் கூடிய வளங்­களை பயன்­ப­டுத்­திக்­கொள்ள அனைத்து இளைஞர் யுவ­தி­களும் முயல வேண்டும்  என்றார்.

இந்நிகழ்வில் ஒசியஸ் கெம்பஸின் பணிப்பாளர் எம்.எல்.எம்.றமிஸ், கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலில், பிரதி வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.எல்.அப்துர் றஹிம், உதவி வலயக்கல்வி பணிப்பாளர் ஏ.எல்.சஹாப், பட இயக்குனர் நிலாபிரியன் எம்.ஐ.தௌபீக்,மற்றும் உயர் அதிகாரிகளும் கல்விமான்களும் கலந்து கொண்டனர்.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget