-காரைதீவு நிருபர் சகா-
அமெரிக்க
அரசாங்க பாதுகாப்புப்படையின் நிதிஒதுக்கீட்டின்கீழ் சம்மாந்துறை
தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் நிருமாணிக்கப்படவுள்ள
இருமாடிக்கட்டடத்திற்கான அடிக்கல்நடும்விழா நேற்று புதன்கிழமை அதிபர்
எ.சி.எம்.ஏ. இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜ.எம்.மன்சூர் சகிதம் அமெரிக்க பிரதிநிதிகளான லெவி எம் பைல் மேஹைல், மக்மிலன் வூட்லெவி ஹம்மன்ட் ஆகியோர் வரவேற்கப்பட்டு அடிக்கல் நடப்பட்டதுடன் அதிதிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் உள்ளிட்ட கல்வியலாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலைச்சமுகம் என பலரும் கலந்துகொண்டனர்.





Post a Comment