-எம்.ஐ.எம்.அஸ்ஹர், எம்.வை. அமீர், யூ.கே.காலீத்தீன்-
சர்வதேச சிறுவர்
தினத்தையொட்டி இன்று (01) கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில், அதிபர் பீ.எம்.எம். பதுறுதீன்
தலைமையில் பல்வேறு நிகழ்கள் இடம்பெற்றன.
மாணவர்கள்
கல்லூரிக்கு வருகை தரும் போது இனிப்புகள் வழங்கி வரவேற்கப்பட்டதுடன் , பொதுக் காலை
ஆராதனையின் போது கல்லூரியின் சிரேஸ்ட ஆசிரியர் அல்ஹாஜ் எஸ்.எச்.ஏ. ஹக்கீம் சிறுவர் தினம் பற்றிய விசேட சொற்பொழிவொன்றை ஆற்றினார்.
மேலும், விழிப்புணர்வு ஊர்வலம் , கயிறுழுத்தல் , துவிச்சக்கரவண்டி ஓட்டம் , சித்திரப்போட்டி
, பரிசில் வழங்கல் போன்ற பல்வேறு நிகழ்வுகளுடன் மாணவர்களுக்கிடையிலான கிறிக்கட் போட்டியொன்றும் இடம்பெற்றது.









Post a Comment