Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

Accident | புகையிரத கடவையில் விபத்து; ஐவர் ஸ்தலத்திலேயே பலி!

File Pix
புகையிரத கடவையில் ஏற்பட்ட விபத்து காரணமாக ஸ்தலத்திலேயே ஐவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வாத்துவ, பொதுபிட்டிய புகையிரத கடவையில் நேற்று  (27) பிற்பகல் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவ்விபத்தின்போது காரில் பயணித்த ஐவர் பலியாகியுள்ளதோடு, மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரணமடைந்த ஐவரும் ஆண்கள் என்பதோடு, அவர்கள் வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget