தென் கிழக்கு பல்கலைக்கழக
சமூகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும்,
அப்பல்கலைக்கழக மாணவர் நலன்புரி
பணிப்பாளரும் அப்பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவகாரங்களுக்கான
இணைப்பாளருமாகிய கலாநிதி றமீஸ்
அபூபக்கர் இம்மாதம் 22 ம் திகதி "சமய
பல்வகைத்தன்மை"(Religious Pluralism) எனும்
இரண்டு (02) மாதகால சிறு பயிற்சி
நெறிக்காக புலமைப்பரிசில் பெற்று
அமெரிக்கா பயணமாகிறார். இப்பயிற்சி நெறி,
அமெரிக்காவின் தலை சிறந்த
பல்கலைக்கழகங்களுள் ஒன்றான டெம்பில்
பல்கலைக்கழகத்தில் (Temple University) இடம்பெறவிருக்கிறது.
உலகில் பல பாகங்களில் இருந்தும் 18
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தெரிவு
செய்யப்பட்ட இப்பயிற்சி நெறிக்கு இலங்கையில் இருந்து இவர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தனது ஆரம்பக்கல்வியை
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையிலும்,
பல்கலைக்கழக கல்வியை தென் கிழக்கு மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்த இவர், தனது கலாநிதி படடப்படிப்பை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில்
பூர்த்தி செய்தார்.
Post a Comment