-எஸ்.அஷ்ரப்கான்-
கல்முனை சனிமெளண்ட் விளை யாட்டுக் கழகத்திற்கு புதிய சீருடை வழங்கும் நிகழ்வு கல்முனையில் இன்று (04) இடம்பெற்றது.
கழகத்தின் நிர்வாக உறுப்பினர் பி.எம்.எம். தாரீக்கின் முயற்சியினால் கட்டார் நண்பர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்ட இப்புதிய சீருடையினை, தாரீக், கழகத்தின் பொருளாளர் அல்-ஹாஜ் எம்.எஸ்.எம். பாறூக்கிடம் வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில், கழகத்தின் பொதுச் செயலாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.எம். அப்துல் மனாப், தலைவர் ஏ.எல்.ஏ. காதர் ஆகியோருடன், கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment