-யூ.கே காலித்தீன்- அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்களது ஆலோசனைக்கமைய இம்மாதம் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய தேசிய வாரமாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படியில் அரசாங்க அலுவலகங்களின் ஊடாக வினைத்திறனும் விளைதிரனும் வாய்ந்த அரசாங்க சேவை ஒன்றை வழங்குவதை நோக்காகக் கொண்டு சகல அரசாங்க நிறுவனங்களிலும் தேகாரோக்கிய நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கல்முனை மாநகர சபையில் மாநகர ஆணையாளர் ஜே. லியாகத் அலியினால் தேசியக் கோடி ஏற்றப்பட்டு நடைப்பயிற்சியும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இதில் மாநகரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.



Post a Comment