Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மாபெரும் ஆய்வுக் கட்டுரைப் போட்டி

தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள், அறபு மொழிப்பீடம் அபிவிருத்தி மற்றும் பயிற்சிகளுக்கான சர்வதேச கலாசார நிலையத்துடன் இணைந்து ஆய்வுக் கட்டுரைப் போட்டியினை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இக்கட்டுரைப் போட்டி “இலங்கை வாழ் பன்மைத்துவ சமூகங்களின் மத்தியில் சகவாழ்வைக் கட்டியெழுப்புதல் - ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்” எனும் கருப்பொருளை மையமாகக்கொண்டு நடைபெறவுள்ளது.

இலங்கைப் பல்கலைக் கழகங்களில் இளமானிக் கற்கைநெறிகளை தொடர்ந்து கொண்டிருக்கும் உள்வாரி, வெளிவாரி மாணவ, மாணவியர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.

போட்டியில் கலந்து கொள்வதற்கான நிபந்தனைகள்:

1. ஆய்வுக் கட்டுரைக்கான மொழி : தமிழ், சிங்களம், ஆங்கிலம் அல்லது அறபு (ஏதாவது ஒரு மொழியில்) ;

2. 3இ000 சொற்களுக்கு குறையாததாக அமைதல்

3. ஏற்கெனவே பிரசுரிக்கப்படாததாகவும்; ஆய்வுக் கடடுரையின் எழுத்தாக்கத்தரம் பேணப்பட்டதாகவும்  இருத்தல்;

4. துறைத் தலைவரினால் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல், (Soft Copies அனுப்பப்படல் வேண்டும்)

5. தெரிவுசெய்யப்படும் கட்டுரைகள் புத்தகம் அல்லது சஞ்சிகையாக வெளியிடப்படும்.

போட்டியில் வெற்றி பெறுவோருக்கு பெறுமதியான பணப்பரிசில்களும் சான்றிதழும் வழங்கப்படும்

முதலாம் பரிசு - 35,000.00

இரண்டாம் பரிசு - 25,000.00

மூன்றாம் பரிசு - 15,000.00

(ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியான பரிசில்கள் உண்டு)

இப்போட்டிக்கான ஆய்வுக் கட்டுரைகள் அனுப்பவேண்டிய இறுதித்திகதி 04.04.2016 ஆகும்.

கட்டுரையின் கட்டமைப்பு தொடர்பான மேலதிக விபரங்களுக்கு :

இணையத்தளம் :  http://www.seu.ac.lk/fia

மின்னஞ்சல்   : essaycompetitionfia@gmail.com

தொடர்பிலக்கங்கள்  : 0778887315, 0772373524

கட்டுரைகள் அனுப்பவேண்டிய முகவரி :
செயலாளர்
ஆய்வுக் கட்டுரைப் போட்டி
இஸ்லாமிய கற்கைகள், அறபு மொழிப் பீடம்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகம் – ஒலுவில்

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget