நாளை 19ம் திகதி சனிக்கிழமை பாலமுனையில் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் வருகையை முன்னிட்டு அவர்களது பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு உயர் அதிகாரிகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸூடன் கலந்துரையாடினர்.
இதன்போது பாதுகாப்பான முறையில் மேடை மற்றும் நுளைவாயில் அமைத்தல், மைதானத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை பிரதி அமைச்சர் ஹரீஸ் பார்வையிட்டதுடன் ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளார்.
Post a Comment