( எஸ்.எம்.எம்.றம்ஸான் )
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் போரத்தின் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு, சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08) காலை 8.30 மணி முதல் மாலை 2.30 மணி வரை நடைபெறவுள்ளதாக போரத்தின் செயலாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். சஹாப்தீன் தெரிவித்தார்.
போரத்தின் வேண்டுகோளுக்கிணங்க பொத்துவில் - அக்கரைப்பற்று சட்ட உதவி ஆணைக்குழுவின் அனுசரணையில் ஊடகவியலாளர்களுக்கான சட்ட ஆலோசனைகள், புலனாய்வு அறிக்கை மற்றும் ஊடக ஒழுக்கக் கோவை போன்ற விடயங்களையும் உள்ளடக்கிய வகையில் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில் போரத்தின் சகல ஊடகவியலாளர்களும் கலந்து பயன்பெறுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு பிரதிப் பணிப்பாளர் அமீர் ஹுஸைன் இதில் கலந்துகொள்ளவுள்ளார்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் போரத்தின் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு, சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08) காலை 8.30 மணி முதல் மாலை 2.30 மணி வரை நடைபெறவுள்ளதாக போரத்தின் செயலாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். சஹாப்தீன் தெரிவித்தார்.
போரத்தின் வேண்டுகோளுக்கிணங்க பொத்துவில் - அக்கரைப்பற்று சட்ட உதவி ஆணைக்குழுவின் அனுசரணையில் ஊடகவியலாளர்களுக்கான சட்ட ஆலோசனைகள், புலனாய்வு அறிக்கை மற்றும் ஊடக ஒழுக்கக் கோவை போன்ற விடயங்களையும் உள்ளடக்கிய வகையில் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில் போரத்தின் சகல ஊடகவியலாளர்களும் கலந்து பயன்பெறுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு பிரதிப் பணிப்பாளர் அமீர் ஹுஸைன் இதில் கலந்துகொள்ளவுள்ளார்.


Post a Comment