கல்முனை, சாய்ந்தமருது பிரதேச பள்ளிவாசல்களில் பல வருட காலமாக முஅத்தின்களாக கடமையாற்றியவர்களை கௌரவித்தலும் வீ கெயார் போ யு பவுண்டேசனின் ஸ்தாபத் தலைவர் மர்ஹூம் அபூவக்கரின் நினைவுப் பேருரை நிகழ்வும் சாய்ந்தமருதிலுள்ள வீ கெயார் போ யு பவுண்டேசன் காரியாலயத்தில் நேற்று (17) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
வீ கெயார் போ யு பவுண்டேசனின் தலைவர் ஏ.எம்.சர்ஜூன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பச் செயலாளர் எம்.ஏ.பழீல், முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.மைமுனா, சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் செயலாளர் எம்.ஏ.மஜீத், கல்முனை முகைதீன் ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், கல்முனை ஹபீப் வங்கியின் முகாமையாளர் எம்.எம்.அன்வர் உள்ளிட்ட உலமாக்கள், புத்திஜீவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்போது முஅத்தின்கள் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் வீ கெயார் போ யு பவுண்டேசனின் அங்கத்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இப்தார் மற்றும் இராப்போசன நிகழ்வுகளும் இடம்பெற்றன.
Post a Comment