Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | மிரட்டல்களுக்கு அஞ்சுபவன் நானல்ல - தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் நாஜிம்


-எம்.வை.அமீர்-
கடந்த காலங்களில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று வந்திருந்த, ஊழல் மோசடிகளை தான், முடிவுக்குக்கொண்டுவந்ததன் காரணமாக, சிலரால் கடிதங்கள் மூலமாகவும் ஏனைய வழிகளிலும், மிரட்டப்படுவதாகவும், இவ்வாறான மிரட்டல்களுக்கு பயந்து ஒருபோதும் தான் மேற்கொள்ளும் நற்பயணத்தை நிறுத்தப்போவதில்லை! என்று  தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர், பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அழுத்தமாகத் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட, கல்விசார ஊழியர்களின் NAWS எனும் அமைப்பினால், ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்வு, அவ் அமைப்பின் தலைவர் எம்.ஏ.றிபாயிஸ் முஹம்மட் தலைமையில் பிரயோக விஞ்ஞான பீட சிற்றுண்டிச்சாலையில் நேற்று  (14) இடம்பெற்றது. 

அமைப்பின் செயலாளர் சலீம் றமீஸின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மௌலவி அல் ஹாபீழ் ஏ,பௌசுடீன் ரமழான் சிந்தனை வழங்கினார். கௌரவ அதிதியாக பிரயோக விஞ்ஞான பீட உதவிப்பதிவாளர் ஏ.ஆர். எம்.மாஹிர் கலந்துகொண்டதுடன் அதிதிகளாக ஊழியர் சங்கத்தின் தலைவர் வை. முபாறக், செயலாளர் ஏ.எம்.நஸ்வி மற்றும் வைத்திய கலாநிதி எம்.ஐ.முஸம்மில் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

நல்ல நோக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், குறித்த இலக்கை நோக்கியே பயணிக்க வேண்டும். இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்படும் முஸ்லிம் மாணவர்களில் பெரும்பான்மையினர், இந்த பல்கலைக்கழகத்துக்கே வருகின்றனர். எங்களை நம்பிவரும் மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்ததாக இருக்க வேண்டும். அதற்காக இங்கு கடமையாற்றும் அடிமட்ட ஊழியர் முதல் உயர்மட்ட ஊழியர்கள் வரை, அவரவரது கடமைகளை மனச்சாட்சியுடன் செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை ஒழுங்காக செய்துள்ளோமா? என இறைவன் நிச்சயமாக நான் உட்பட அனைவரிடமும் வினவுவான் நாங்கள் ஒழுங்காக செய்திருந்தால் பயப்பட வேண்டியதில்லை.
நான், பல்வேறு வசதிகளுடனேயே இங்கு வருவதற்கு முதல் இருந்தேன். இங்கு வந்தால் அச்சுறுத்தல்கள் வரும் என்று என்னிடம் பலரும் அப்போதே கூறினார். அவைகளைப்பற்றி அலட்டிக்கொள்ளவே இல்லை.

விபத்தின் ஊடாக கொலைசெய்வோம், நஞ்சூட்டி கொல்லுவோம் மற்றும் குண்டுத்தாக்குதல் நடத்துவோம் என்றல்லாம் மிரட்டுகிறார்கள். நான் ஒருபோதும் மரணத்துக்குப் பயந்தவன் இல்லை. இந்த பல்கலைக்கழகத்தில் நான் இருக்கும் காலம் வரை அநீதி, ஊழல் மற்றும் மோசடிகளுக்கு இடமளிக்க மாட்டேன். இந்தப்பயணத்தில் மரணத்தை சந்திக்க நேரிட்டாலும் அதனை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வேன். என்றார்.

கடந்த காலங்களில் நீங்கள் எவ்வாறு பணியாற்றியிருந்தாலும் பரவாயில்லை. இனிவரும் காலங்களில் நமது பல்கலைக்கழகத்தை நாம் உயர்நிலைக்குக் கொண்டுசெல்ல, ஒவ்வொருவரும் மனச்சாட்சியுடன் செயற்பட்டு அவரவரது கடமைகளை சிறப்பாக செய்வதுடன் தன்னுடன் இணைந்து செயற்படுமாறும் அறைகூவல் விடுத்தார்.

நிகழ்வின்போது சிரேஷ்ட தொழினுட்பவியலாளர் எம்.ஐ.எம்.ஏ. ஹமீட்டின் மகள், இன்பாஷா ஹமீட் சுற்றாடல் முன்னோடி வேலைத்திட்டத்தில், தேசிய ரீதியில் ஜனாதிபதி விருதினை பெற்றதை முன்னிட்டு, NAWS அமைப்பின் சார்பில் உபவேந்தரினால் கௌரவ  ஞாபகசின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்ட எம்.எச்.எம்.றிசாட் என்ற ஊழியருக்கு அமைப்பினால் உதவுதொகை ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது.

பிரயோக விஞ்ஞான பீட, கல்விசார ஊழியர்களின் NAWS எனும் அமைப்பினால் ஏற்பாடு செயப்பட்டிருந்த இந்நிகழ்வுக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் ஊழியர்களின் குடும்பத்தினரும் கலந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget