-ஏ.பி.எம் அஸ்ஹர்-சாய்ந்தமருது யுனிவேர்ஸல் பாலர் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் நேற்று (17) இடம் பெற்றன.
யுனிவேர்ஸல் பாலர் பாடசாலையின் பணிப்பாளர் ஏ.ஆர்.எம் .ஜூபீர் தலைமையில் சாய்ந்தமருது மழ்ஹருஷ்ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெற்றோலிய வளத்துறை பிரதியமைச்சர் அனோமா க்மகே பிரதம அதிதியாககலந்து கொண்டார் .
விஷேட அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்.ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனைத்தொகுதி அமைப்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.எஸ். அப்துல் ரஸ்ஸாக் டாக்டர் பெளசுல் பஸீஹா மற்றும் மழ்ஹருஷ்ஷம்ஸ் மகா வித்தியாலய அதிபர் எம்.எஸ்.ஐ. மதனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் மஞ்சல் இல்லம் முதல் இடத்தைப்பெற்று வெற்றி பெற்றதுடன்,
பிரதியமைச்சர் உட்பட அதிதிகளுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.







Post a Comment