Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதான அபிவிருத்தி அங்குரார்ப்பண விழா (படங்கள்)

அபிவிருத்தியின் அடுத்த மயில்களை எட்டுவதே எமது இலக்கு - பிரதி அமைச்சர் ஹரீஸ்

-ஹாசிப் யாஸீன், அகமட் எஸ்.முகைடீன், எம்.எம்.ஜபீர், எஸ்.எம்.எம்.றம்ஸான், அபு அலா-
தேசிய விளையாட்டு விழாவை யாழ்ப்பானத்தில் நடத்தியதன் மூலம் வடக்கில் விளையாட்டுத்துறைக்கு புத்துயிர் அழித்த எமது விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இன்று கிழக்கின் முகவெற்றிலையான கல்முனை நகரத்தில் விளையாட்டு மைதானத் தொகுதியை உருவாக்கின்ற பணியினை ஆரம்பித்து வைத்து, இப்பிராந்தியத்தின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு அடித்தளமிட்டுள்ளார்.

நாங்கள் பல அபிவிருத்திகளை இந்த மண்ணில் அங்குரார்ப்பணம் செய்ய இருக்கின்றோம். இதன் மூலம் அபிவிருத்தியில் ஒரு மைல்கல்லை அடைந்தே தீர்வோம் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும்இ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதான அபிவிருத்தி அங்குரார்ப்பண விழா நேற்று (09) ஞாயிற்றுக்கிழமை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர பிரதம அதிதியாக கலந்து கொண்டு இம்மைதான அபிவிருத்திக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன்இ கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர்இ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்இ விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் டீ.எம்.ஆர்.பி.திசாநாயக்கஇ பணிப்பாளர் நாயகம் எஸ்.ஈ.ஆர்.எம்.எஸ்.பீ.பண்டாரஇ பிரதேச செயலாளர்களான எம்.எச்.கனிஇ ஏ.எல்.எம்.சலீம்இ சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபாஇ கல்முனை முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ்இ முன்னாள் தவிசாளர்கள் எம்.ஏ. அன்சில்இ எம்.எம்.தாஹிர் உள்ளிட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள்இ விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் ஹரீஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்இ

விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் வகையில்  பொத்துவில் தொடக்கம் பெரிய நீலாவனை வரையுள்ள கரையோரப் பிரதேசத்தில் ஒரு முழுமையான விளையாட்டு மைதானம் இல்லாமை விளையாட்டு வீரர்கள்இ ரசிகர்கள்இ சமூக நலன் விரும்பிகளின் நீண்டநாள் பெரும் குறையாக காணப்பட்டது. இப்பிராந்தியத்தின் மக்கள் பிரதிநிதியாகிய நான் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் என்ற வகையில் இக்குறையை நிவர்த்திப்பதற்காக சகல சமூகங்களும் வாழ்கின்ற கல்முனை நகரத்தில் காணப்படும் சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தை சகல வசதிகளும் கொண்ட ஒரு மைதானமாக அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன்.

விளையாட்டுத்துறை அமைச்சினால் மாவட்டத்திற்கு ஒரு மைதானத்தை தான் முழுமையான மைதானமாக அமைக்க முடியும். அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் முழுமையான மைதானத்தை அமைப்பதற்கான கோட்டா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அம்பாறை நகரில் அமைப்பதற்காக வழங்கப்பட்ட நிலையில் கல்முனையில் சகல வசதிகளும் கொண்ட மைதானத்தை அமைப்பதில் சிக்கல்கள் காணப்பட்டன.

இருந்த போதிலும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தலைமையில் அமைச்சு அதிகாரிகள் உள்ளிட்ட நாம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்காவுடன் பேச்சுவாத்தை நடத்தி கரையோரப் பிரதேசத்தின் கேந்திர மையமாக காணப்படும் கல்முனையில் முழுமையான மைதானத்தை அமைப்பதற்கான தீர்மானத்தை எடுத்து அதற்கு தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளோம்.

இதன் மூலம் ஓடுபாதைஇ 17 விதமான விளையாட்டுக்களை விளையாடக் கூடிய உள்ளக விளையாட்டு அரங்குஇ நவீன தரத்திலான பார்வையாளர் அரங்குஇ நீச்சல் தடாகம் போன்ற எல்லா வசதிகளும் கொண்ட ஒரு முழுமையான மைதானத்தை அமைப்பதற்கான வரைபடங்கள் தயாரிக்பட்டுள்ளது. அந்த வகையில் அவ்வேலைத்திட்டத்தை இன்று ஆரம்பித்து வைத்துள்ளோம். இது உண்மையில் இப்பிராந்தியத்தில் வாழ்கின்ற விளையாட்டு கழகங்கள் மற்றும் இளைஞர் சமூதாயத்திற்கு கிடைத்த பெரும் பாக்கியமாக காணப்படுகிறது.

முற்போக்கான சிந்தனை கொண்ட சிறுபான்மை தமிழ் முஸ்லிம் சமூகத்தின்  உணர்வுகளை மதித்து நடக்குகின்ற எனது பல்கலைக்கழக நண்பரான விளையாட்டுத்துறை அமைச்சர்; தயாசிறி ஜயசேகர அண்மையில் தேசிய விளையாட்டு விழாவை யாழ்ப்பானத்தில் நடத்தியதன் மூலம் வடக்கில் விளையாட்டுத்துறைக்கு புத்துயிர் அழித்தார். அதேபோன்று இன்று கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை நகரத்தில் விளையாட்டு மைதானத்தை உருவாக்கின்ற பணியினை ஆரம்பித்து இப்பிரதேசத்தின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு அடித்தளமிட்டுள்ளார்.  இவ்விளையாட்டு மைதானம் சிறப்பாக அமைகின்றபோது நிச்சயமாக இப்பிராந்தியத்திலுள்;ள வீரர்களின் திறமைகள் தேசிய மற்றும்; சர்வதேச சாதனைகளை படைப்பதற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

கல்முனை பிரதேசத்தின் அபிவிருத்தியில் வசந்த காலம் இன்று ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் வழிகாட்டுதலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் தலைமையில் நாங்கள் பல அபிவிருத்திகளை இந்த மண்ணில் அங்குரார்ப்பணம் செய்ய இருக்கின்றோம். இதன் மூலம் அபிவிருத்தியில் ஒரு மைல்கல்லை அடைந்தே தீர்வோம் என்பதை மிக ஆணித்தரமாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன் எனவும் தெரிவித்தார்.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget