சாய்தமருது
பிரதேச அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் கல்முனைத்
தொகுதி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்
தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இன்று (6) வியாழக்கிழமை
நடைபெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.
ஹனீபா, உதவி பிரதேச செயலாளர் எம். றிகாஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர்
எம். ஜஃபர் உள்ளிட்ட திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள்,
பாடசாலை அதிபர்கள், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச்
செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், பிரதேச செயலக
உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது
சாய்ந்தமருது பிரதேச கிராம சேவகர் பிரிவுகளில் மேற்கொள்ளப்படும்
கிராமத்திற்கொரு அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான முன்னேற்றம் தொடர்பில்
கிராம சேவகர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகதர்கள் விளக்கமளித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து பூர்த்தி செய்யப்படாத வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துமாறு
பிரதி அமைச்சர் ஹரீஸ் பணிப்புரை வழங்கினார்.
அத்தோடு
சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற வாழ்வாதார உதவி
வழங்கும் திட்டம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும்
இதன்போது கலந்துரையாடப்பட்டது.
எதிர்காலத்தில்
முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்ட
முன்மொழிவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அந்தவகையில் சாய்ந்தமருது
பிரதேசத்தில் அபிவிருத்தி செய்ய வேண்டிய வீதி மற்றும் வடிகான் தொடர்பில்
ஆராயப்பட்டதோடு பிரதேச பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான
தேவைப்பாடு குறித்தும் கேட்டறியப்பட்டது.
Post a Comment