சித்திரைப்
புதுவருடத்தையொட்டி பாடசாலைகளுக்கிடையில் நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் வகையில் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மகா வித்தியாலய அதிபர் ,பிரதி அதிபர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் ” நல்லிணக்க கலை கலாசார விளையாட்டு ” நிகழ்வுகளின் ஒரு பகுதியாக கடந்த
செவ்வாய்க்கிழமை ( 22
) பாடசாலையில் மைதானத்தில் இடம்பெற்ற சினேகபுர்வ கிறிக்கட்
போட்டியில் பட்டிருப்பு தேசிய பாடசாலை , களுவாஞ்சிகுடி ஆசிரியர் அணி 5 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய
களுதாவளை மகா வித்தியாலய ஆசிரியர் அணி 6 ஓவர்களில்
2 விக்கட்டுக்களை இழந்து 51 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பட்டிருப்பு
தேசிய பாடசாலை , களுவாஞ்சிகுடி ஆசிரியர் அணி 4.4 ஓவர்களில்
2 விக்கட்டுக்களை இழந்து 52 ஓட்டங்களைப் பெற்று வெற்றியினை தனதாக்கிக் கொண்டனர்.
பாடசாலை
அதிபர் திரு.பே.காப்தீபன் தலைமையில்
இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி திருமதி. சு.வரதராஜன் பிரதம
அதிதியாக கலந்து கொண்டார். பாடசாலை பிரதி அதிபர்களான செ.செந்தில்குமார் , திருமதி.சு.சுரேஸ் குமார் , பொறுப்பாசிரியை திருமதி.வ.புவனேந்திரராஜா , பட்டிருப்பு
தேசிய பாடசாலை , களுவாஞ்சிகுடி சிரேஸ்ட ஆசிரியர் எம்.குமாரசிங்கம் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்










Post a Comment