சாய்ந்தமருது
தஹ்வா இஸ்லாமிய்யா கலாபீடத்தில் ” காயிதா நூராணியா ” கற்கை நெறியை புர்த்தி செய்த மாணவர்களுக்கும் , அல் – குர்ஆன் மனனம் செய்யும் மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை கலாபீட கேட்போர் கூடத்தில் கலாபீடத்தின் தலைவர் யு.எல்.எம்.காசிம் மௌலவி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்
ஏறாவுர் அஸ்பாஹ் அல்.- குர்ஆன் அகடமி பணிப்பாளர் எம்.எல்.எம்.இர்ஸாத் பிரதம அதிதியாகவும் , சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம்.ஹனீபா
, சாய்ந்தமருது – மாளிகைக்காடு உலமா சபைத் தலைவர் எம்.எம்.சலீம் மௌலவி ஆகியோர் விசேட அதிதிகளாகவும்
கலந்து கொண்டனர்..
Post a Comment