
வெள்ள அனர்த்தங்கள் ஏற்படும்போது, உடனடியாக வெள்ளம் வடிந்தோடவும் பொதுமக்களுக்கான சேவைகள் வழங்கவும் சகல ஏற்பாடுகளுடனும் ஆயத்த நிலையில் இருக்குமாறும், ஹாபிஸ் நசீர் அஹமட் பணிப்புரைக்கமைய முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் அசெளகரியங்களுக்குள்ளாகும் பொதுமக்களுக்கான சேவைகளை செய்யத் தவறும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலும் முதலமைச்சருக்கு தகவல் வழங்க முடியும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment